Categories: சினிமா

“தேசத்தை திரும்பி பார்க்க வைத்தவர்களுக்கு வாழ்த்துக்கள்”!! வாழ்த்தி பதிவிட்டுள்ள கமல்”!!

வெளியிட்டது

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக வந்தாலும், இன்று தனக்கென மிக பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளவர் நடிகர் சூர்யா. சிவகுமாரின் மகனான இவர் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான “நேருக்கு நேர்” திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் சில காலம் வெற்றிக்காக காத்திருந்த இவருக்கு பாலாவின் “நந்தா” படம் மிக பெரிய அளவில் காய் கொடுத்தது. அதற்கு முன் சில காமெடி , காதல் படங்கள் நடித்து இருந்தாலும் மக்கள் இவரை நந்தா படத்தின் மூலம் தான் ஒரு தனி நாயகனாக ஏற்று கொண்டனர். பின்னர் ஆறு, வேல், கஜினி, வாரணம் ஆயிரம், காக்க காக்க, ஜில்லுனு ஒரு காதல், சிங்கம் என வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

"தேசத்தை திரும்பி பார்க்க வைத்தவர்களுக்கு வாழ்த்துக்கள்"!! வாழ்த்தி பதிவிட்டுள்ள கமல்"!! 1

இதனை அடுத்து எடுக்கப்பட்ட “ஜெய் பீம்” படம். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக சந்துரு என்ற ஒரு வழக்கறிஞரின் வழகியை அடிப்படையாக கொண்டு உருவான இந்த படம் வரவேற்பையும், சர்ச்சைகளையும் சேர்ந்தே பெற்றது. மிக பெரிய அளவில் மக்களால் கொண்டாடப்பட்ட இந்த படம், அரசியல் சர்ச்சைகள் பலவற்றை பெற்ற போதிலும், படம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த படமும் ஆஸ்கார் நாமினேஷனுக்கு இந்திய சார்பில் சமர்ப்பிக்கப்பட்டது.

கடைசியில் தேர்வாகாமல் போனாலும் படத்தை பார்த்த நடுவர்கள் கூட படத்தை பாராட்டி வாழ்த்துக்களை வெளியிட்டனர். இது சூரியாவிற்கும், படக்குழுவிற்கும் மிக பெரிய மரியாதையை கொடுத்தது. இந்த ஆண்டு நடைபெறவுள்ள “95வது ஆஸ்கார் விருதுகள்” அமைப்பின் சார்பில் ஆஸ்கார் அமைப்பின் உறுப்பினராக, அந்த அமைப்பு சார்பில் சூர்யாவுக்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி இப்பொது வெளியாகி மிக பெரிய அளவில் பகிரப்படுவதுடன் நடிகர் சூர்யாவிற்கு பாராட்டுகளும் குவிந்து வருகின்றன. இந்த பட்டியலில் மற்றொரு இந்திய நடிகை கஜோலும் உள்ளார்.


இந்த பெரிய அதிகாரத்திற்கு மேல் தற்போது மிக பெரிய விருதை வென்று மிக பெரிய கவுரவத்தை பெற்றுளளர் சூரியா. நடிகர் சூர்யாவின் சூரரை போற்று படம் கொரோன காலகட்டத்தால் OTT தளத்தில் வெளியானாலும் மாபெரும் வெற்றியை பெற்றது. சூர்யா, அபர்ணா பாலமுரளி, கருணாஸ், ஊர்வசி, “பூ” ராமு முதலனோர் இந்த படத்தில் நடித்து இருந்தனர். சுதா கொங்கரா இயக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்தார். ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாள, ஹிந்தி மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

படத்திற்கு சிறந்த பின்னணி இசை அமைத்தற்காக ஜி.வி.பிரகாஷ் குமார், சிறந்த திரைக்கதை அமைத்தற்காக ஷாலினி உஷாதேவி மற்றும் சுதா கொங்கரா வென்றுள்ளனர். மேலும் யோகிபாபு  நடிப்பில் வெளியான “மண்டேலா” படமும் சிறந்த திரைக்கதைக்கான விருதைத் வென்றுள்ளது. இந்த படத்தை இயக்கிய மடோன்னே அஸ்வின் இந்த விருதை பெற்றுள்ளார்.

இந்த மிக பெரிய அங்கிகாரத்திற்கு இப்பொது பல்வேறு இடங்களில் இருந்தும் நடிகர் சூர்யாவிற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. நடிகர் கமலும் தற்போது தன்னுடைய பாராட்டுகளை சூர்யாவிற்கு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “சூரரை போற்று திரைப்படம் 5 தேசிய விருதுகளை குவித்துள்ளது பெருமையளிக்கிறது. சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும், மண்டேலா என ஒட்டுமொத்தமாக 10 விரோதிகளை அள்ளி தேசத்தை திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது தமிழ் திரையுலகம். விருதாளர்கள் அனைவர்க்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

தமிழில் மேலும் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும், மண்டேலா என்ற படங்களும் 5 விருதுகளை வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. யோகிபாபு நடிப்பில் வெளியான “மண்டேலா” படம் நல்ல விமர்சனத்தை பெற்றது. அதே போல இயக்குனர் வசந்தின் இயக்கத்தால் வெளியான “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்” படத்தில் நடித்ததற்காக லட்சுமி பிரியா சந்திரமௌலியும், எடிட்டர் ஆர்தர் வில்சனும் தேசிய விருதை வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்