
பாலிவுட் சினிமாவின் பாட்ஷா என ரசிகர்கள் கொண்டாடப்படும் நடிகர் ஷாருக் கான். எந்தவித பின்புலமோ, சினிமா நபர்களின் தொடர்பு இல்லாமல் உழைப்பே மட்டுமே முதலாக போட்டு இன்று இந்திய மட்டுமின்றி உலகளவில் மிக பெரிய ரசிகர் பட்டாளம் கொண்டுள்ள நடிகராக திகழ்கிறார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான “ஜீரோ” படம் மிக பெரிய தோல்வியை தழுவியதால் 3 ஆண்டுகளாக இவருடைய நடிப்பில் இன்னும் எந்த படமும் வெளியாகவில்லை.

இப்பொது “பதான்”, நம் ஊர் அட்லீயுடன் “ஜவான்”, பிரபல பாலிவுட் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானியுடன் “டுங்கி” போன்ற படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு கௌரி கான் என்பவருடன் திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். ஆர்யன் கான், ஆயன் கான் என்ற 2 மகன்களும், சஹானா கான் என்ற மகளும் இருக்கிறார்கள். அண்மையில் இவருடைய மூத்த மகன் ஆர்யன் கான் சட்டத்திற்கு புறம்பாக போதை பொருள் வாங்கி, உபயோகப்படுத்தியதாகவும் கைது செய்யப்பட்டு கிட்டத்தட்ட 1 மாத காலம் வரையிலும் சிறையில் இருந்து அண்மையில் தான் வெளியில் வந்தார்.

இந்த வழக்கு அங்கு பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், அண்மையில் இவர் மது குடிக்கும் வீடியோ ஒன்று பாலிவுட் வட்டாரங்களில் மிகவும் வைரலாக பரவப்பட்டு வருகிறது. இப்போதைய காலகட்டத்தில் இது போன்ற விஷயங்கள் சாதாரணம் என்றாலும், இது போன்ற பெரிய இடத்து பிள்ளைகள் இது போன்ற சம்பத்தில் சிக்கினால் பெரிய விஷயமாக பேசப்பட்டு வருகிறது.

இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் மிகவும் வேகமாக பரவ, அதனை கண்ட தமிழ் நடிகை கஸ்தூரி ஆர்யன் கானுக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார். அவருடைய பதிவில் அந்த விடீயோவை பகிர்ந்து, “சிலர் இதனை அந்த பையன் பொறுப்பில்லாமல் செய்துவருகிறார் என பரப்புகிறார்கள். ஆனால் உண்மையில் அவர் பொறுப்புணர்ச்சியோடு குடித்தவுடன் தன்னுடைய மாஸ்க்கை போட்டுக்கொள்கிறார்” என எழுதி பதிவிட்டுள்ளார். இந்த பதிவு இப்பொது மிகவும் பகிரப்பட்டு வருகிறது.
Others are using this video to point out #AryanKhan being irresponsible.
I see him being super responsible. Observe how he masks up right after taking his shot. :)) https://t.co/rjTExxg1YQ— Kasturi Shankar (@KasthuriShankar) July 19, 2022