சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலின் நாளைக்கான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் சிவசங்கரி பற்றிய உண்மைகளை அனைவரிடமும் கூற போகிறேன் என்று சொல்லி கிளம்பி செல்லும் கயலை, தற்போது சிவசங்கரி பிளாக் மெயில் செய்து தடுத்து நிறுத்துகிறார்ழ கயலும் அவரின் அந்த பிளாக் மெயிலுக்கு பயந்து ஓடி வருகிறார். அந்த ப்ரோமோவை தற்போது சன் தொலைக்காட்சி வெளியிட்டு இருக்கிறது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக எழில் கயல் திருமணம் நடக்குமா நடக்காதா? என்கிற பரபரப்புடன் கயல் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. பலரும் இந்த சீரியலை பார்ப்பதை நிறுத்தி விட்டதாக கமெண்ட் செய்து வருகின்றனர். அதற்கு முக்கிய காரணம் எழில் கயல் திருமணத்தில் அடுத்தடுத்து அரங்கேறும் நிகழ்வுகள் தான். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நாடகத்தை ஜவ்வாக இழுக்க வேண்டும் என்கிற காரணத்திற்காக ஒரு நாள் இரவு நடக்கும் வரவேற்பை வைத்து இழுஇழுவென இழுத்துக் கொண்டிருக்கிறார் இயக்குனர். ஒரு வழியாக அவரின் இழுவை முடிந்து தற்போது திருமண ஏற்பாடுகள் நடந்து வருகிறதுழ ஆனால் அங்கும் ஒரு புது டிவிஸ்ட்டாக கயலை மீண்டும் ஆள் வைத்து கடத்த சிவசங்கரி திட்டமிடுகிறார். ஆனால் அந்த நேரத்தில் அங்கு என்ட்ரி கொடுக்கும் ஈஸ்வரி கயலை காப்பாற்றி அழைத்துச் செல்கிறார். திருமண மண்டபத்திற்கு செல்லும் கயல் சிவசங்கரியிடம் நான் இப்போதே உன்னை பற்றிய உண்மைகளை கூறப்போகிறேன் என்று சொல்லி மண்டபத்தில் இருந்து வேகமாக கிளம்பி செல்கிறார். ஆனால் உண்மைகளை கூற வேண்டாம் என்று சொல்லும் சிவசங்கரி கயலை மிரட்டி பிளாக் மெயில் செய்கிறார். மேலும் அங்கு இருக்கும் ஒரு கண்ணாடி பாட்டிலை எடுத்து உடைக்கிறார்.

அப்போது திரும்பி பார்க்கும் கயல் பயத்தில் அவரை நோக்கி ஓடுகிறார். இதனால் சிவசங்கரி எதுவும் தற்கொலை முடிவை எடுத்தாரா என்பது தெரியவில்லை. பரபரப்பான அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video.!
YouTube Video Embed Code Credits: Sun Tv