தற்போது பிரியங்கா மற்றும் மணிமேகலை இடையேயான மோதல் இணையத்தில் பூகம்பத்தை கிளப்பி இருக்கிறது. மணிமேகலையின் குற்றச்சாட்டுக்கு இதுவரை பிரியங்கா தரப்பில் இருந்து எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. அதே சமயம் விஜய் டிவி பிரபலங்கள் அனைவரும் பிரியங்கா ஆதரவாளர்களாக மாறி அவருக்கு ஆதரவாக பேசி மணிமேகலை மீது தவறு இருப்பதாக பேசி வருகின்றனர்.

விஜய் டிவி பிரபலங்கள் அனைவர்க்கும் மணிமேகலை சரியான பதிலடியையும் கொடுத்து உள்ளார். தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் , கோமாளியாக வரும் சரத், இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, இது இருவருக்குமான பிரச்சனை, இருவரும் இப்போ சண்டை போடுவாங்க , பிறகு சேர்ந்துகொள்வார்கள், நாம் என்ன முட்டாளா. அவர்கள் சண்டைக்குள் நாம் தலையிட வேண்டாம் இது நமக்கு தேவையில்லாதது என கூறியுள்ளார்.

மேலும் இது TRP-க்காக போடுற சண்டை எனவும், மக்கள் தன்னை மறந்துவிட்டார்கள் என நினைத்து இந்த சண்டையை சோசியல் மீடியாவுக்குள் கொண்டு வந்ததாகவும் , அதுமட்டுமின்றி இதை பற்றி வீடியோ போட்டு சம்பாதித்தும் விட்டதாக மணிமேகலை பற்றி கூறி உள்ளார்.