பானா காத்தாடி படத்தின் மூலம் சினிமாவுக்குள் அறிமுகம் ஆகியவர் நடிகர் அதர்வா. இப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. தொடர்ந்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து வெற்றிப்படங்களை கொடுத்து வந்த இவருக்கு, சில சறுக்கலும் சினிமாவில் ஏற்பட்டு இருந்தது. தற்போது நல்ல கதைகளை கேட்டு நடிகர் அதர்வா நடிக்க தொடங்கி உள்ளார். சமீபகாலமாக இவருக்கு பெரிதாக படங்கள் வெளியாகவில்லை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவருக்கு அடுத்ததாக இயக்குனர் கார்த்திக் நரேனின் இயக்கத்தில் நிறங்கள் மூன்று படம் வெளியாக உள்ளது. இப்படத்தில் இவருடன் நடிகர் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். ஜேக்ஸ் பீஜாய் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். இப்படம் நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்த நிலையில், தற்போது படக்குழு படத்தை வெளியிடுவதற்கான வேலைகளில் இறங்கி உள்ளது.

அதன்படி தற்போது இப்படத்தின் சில நிமிட காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது. இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. படம் வெற்றிபெற ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை படக்குழுவினருக்கு தெரிவித்து வருகின்றனர்.
Embed Video Credits : AYNGARAN