விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ள நிலையில், தற்போது தொடரின் இரண்டாவது சீசன் ரசிகர்களுக்காக இயக்கப்பட்டு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. முதல் சீசனை போலவே இந்த சீசனுக்கும் மக்கள் பேராதரவை கொடுத்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த தொடரின் புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. ப்ரோமோவில், செந்தில் அரசு வேலைக்காக தேர்வு எழுத செல்கிறார்.அப்பாவிடம் ஆசீர்வாதம் வாங்கும் பொழுது பாண்டி, அதிர்ஷ்டம் இருந்தால்தான் ஜெயிக்க முடியும் என கூறுகிறார். இதனால் கடுப்பாகிய மீனா, செந்திலை அங்கிருந்து அழைத்து செல்கிறார். பின்னர் பாண்டி, மீனா அப்பாவிடம் சென்று, என் மகன் அரசு அதிகாரியாக ஆகுவான் என கூறுகிறார்.

செந்தில் தேர்வு எழுதும் அறைக்கு வெளியே மீனா காத்து கொண்டு இருக்கிறார். அவரை பார்த்த செந்தில், மீனாவுக்காகவாது தேர்வில் வெற்றிபெற வேண்டும் என தேர்வு எழுதுகிறார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.
Embed Video Credits : VIJAY TELEVISION