விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் புது வீட்டிற்கு அனைத்து அறைகளுக்கும் ஏசியை வாங்கி மாட்டுகிறார் மூர்த்தி. பின்னர் கரண்ட் பில் 28 ஆயிரத்தை நெருங்கி இருக்கிறது. இதனால் அனைவரிடமும் ஏசியை ஒன்றரை மணி நேரம் மட்டுமே போடுமாறு மூர்த்தி கதறிக் கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் முடிவுக்கு வர இருப்பதாக பல அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் உலவி வருகிறது் அதேபோல் கதையில்லாமல் எதையோ ஓட்டிக் கொண்டிருக்கின்றனர். தொடர் 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த தொடரை முடிப்பது தான் நலம் என்று ரசிகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது கதைப்படி தனத்துக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது தெரியவந்து அவர் அறுவை சிகிச்சை முடித்திருக்கிறார். மேலும் தாங்கள் இத்தனை நாட்களாக கனவு கண்ட கனவு இல்லத்தையும் கட்டி முடித்து இருக்கின்றனர். கதை இப்படியாக நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று ஒரு ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் நான்கு அண்ணன் தம்பிகள் வசிக்கும் அறைகளுக்கும் ஏசியை வாங்கி மாட்டப் போவதாக மூர்த்தி கூறிக் கொண்டிருக்கிறார். உடனடியாக கடைக்குச் சென்று நான்கு அறைகளுக்கும் ஏசியை வாங்கிக் கொண்டு மாட்டுகிறார். அனைவரும் ஏசியில் நன்றாக தூங்குகின்றனர்.

பின்னர் கதிர் கரண்ட் பில் அட்டையை எடுத்துக்கொண்டு வந்து காட்டுகிறார். அப்போது 28000 என்று எழுதப்பட்டிருக்கிறது. அதை பார்த்துவிட்டு கதறும் மூர்த்தி இனிமேல் அனைவரும் ஏசியை ஒன்றரை மணி நேரம் மட்டுமே உபயோகப்படுத்துங்கள் என்று சொல்லி கதறிக் கொண்டிருக்கிறார். அந்த காமெடியான ப்ரோமோ தற்போது வெளியாக உள்ளது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits:Vijay Television