
தமிழக மக்களின் நலன் மேம்பாட்டிற்காக பணியாற்ற வேண்டியிருந்தால் ரஜினியுடன் இணைந்து பயணிப்போம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்து உள்ளார்.
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக மக்களின் நலனுக்காக நானும் கமலும் இணையும் சூழல் ஏற்பட்டால் நிச்சயமாக இணைந்து பணியாற்றுவேன். ஓபிஎஸ் எனக்கு கண்டனம் தெரிவித்தது அவரது தனிப்பட்ட கருத்து, அதற்கு நான் கருத்து கூற விரும்பவில்லை” என்றார்.
விளம்பரம்
தேவைப்பட்டால் இணைவோம் என்று நடிகர் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் தனித்தனியே பேட்டி அளித்துள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் மிக பரபரப்பான சூழலை ஏற்படுத்தி உள்ளது.
விளம்பரம்