சீரியல்களுக்கு மிகவும் பெயர் போன சேனல் என்றால் அது விஜய் தொலைக்காட்சி தான். இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் சிறகடிக்க ஆசை. இந்த தொடர் ரசிகர்களின் மனங்களை கவர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு வருகிறது. நாளுக்கு நாள் தொடரின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்து வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. வீட்டில் கொலு வைக்க முத்து மனோஜிடம் காசு கேட்கிறார். அதற்கு மனோஜ் தரமாட்டேன் என மறுக்கிறார். உடனே கடுப்பாகிய முத்து, வீட்டில் நடைபெறும் கொலுவில் நீ கலந்துகொள்ள கூடாது, இந்த பக்கமே வரவே கூடாது என கூறி எச்சரிக்கின்றார். இதனால் கடுப்பாகும் ரோகிணி காசு தருவதாக ஒப்புக்கொள்கிறார்.
மனோஜ் ரோகிணியிடம் காசு கொடுக்க ஒப்புக்கொண்டதற்கு சண்டையிடுகிறார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது. முத்து, மனோஜை கேலி செய்யும் போது அனைவர்க்கும் மகிழ்ச்சியாக இருப்பதாக ஒப்புக்கொள்கிறார்.
Embed Video Credits : VIJAY TELEVISION