விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ரோகிணி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சல்மா அருண். இவருக்கு திருமணம் ஆகி ஆரவ் என்கிற ஒரு மகன் இருக்கிறார்.

அவர் தனது மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. திரைத் துறையில் மாடலாக தனது வாழ்க்கை தொடங்கியவர் நடிகை சல்மா அருண்.

இவருக்கு திருப்புமுனையாக அமைந்த ஒரு நாடகம் என்று சொன்னால் அது ‘சிறகடிக்க ஆசை’ சீரியல்தான். விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு சீரியலில் முக்கிய பத்திரமான ரோகிணி என்கிற கதாபாத்திரத்தில் சல்மா நடித்து வருகிறார்.

இந்த கதைப்படி ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை இருக்கும் நிலையில் மனோஜ் என்பவரை ஏமாற்றி இரண்டாவதாக திருமணம் செய்து கொள்கிறார். இந்த உண்மை மனோஜ்க்கு தெரிய வருமா? இல்லையா? என்ற விறுவிறுப்புடன் கதை நகர்ந்து வருகிறது.

இதில் முக்கிய நடிகர்களாக முத்துவும் மீனாவும் நடித்துக் கொண்டிருக்கும் வேளையில், ரோகிணி மனோஜ் கதாபாத்திரமும் முக்கியத்துவம் பெறுகிறது. வில்லி மாமியாருக்கு சப்போர்ட் செய்யும் ரோகிணி கதாபாத்திரம் சற்று எரிச்சலை ஏற்படுத்தினாலும் கதையின் பல முக்கிய திருப்பத்திற்கு காரணமாக இருக்கிறது.

இந்த கதாபாத்திரத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருபவர் நடிகை சல்மா அருண். இவர் சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் பட்டதாரி ஆவார். 30 வயது ஆகும் இவருக்கு திரைத்துறையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்பதுதான் ஆசையாக இருந்துள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பாரதிகண்ணம்மா சீசன் 1’, நம்ம வீட்டு பொண்ணு போன்ற சீரியல்களில் நடித்திருக்கிறார். மேலும் ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘அமுதாவும் அன்னலட்சுமியும்’ என்ற சீரியலிலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

‘சிறகடிக்க ஆசை’ சீரியலுக்குப் பின்னர் சல்மாவுக்கு தனி ரசிகர் பட்டாளமே உருவாகி இருக்கிறது. இந்த நிலையில் நிஜ வாழ்க்கையில் அவருக்கு திருமணம் ஆகி குழந்தை இருப்பது தெரிய வந்துள்ளது.

அவர் தனது மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தற்போது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

இந்த புகைப்படங்களை பார்த்த பலரும் ரோகிணிக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா? என்று ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்..!