நவராத்திரியை கொலு வைத்து கொண்டாடும் சினேகா.! சினேகா பிரசன்னா வீட்டில் நடந்த பூஜை.!

நடிகை சினேகா தனது வீட்டில் நவராத்திரி பூஜையை மிக சிறப்பாக கொண்டாடி இருக்கிறார். இந்த பூஜையில் பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை சினேகா. இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விகான் என்ற மகனும் ஆதித்ந்யா என்ற மகளும் உள்ளனர். சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் சினேகாவும், பிரசன்னாவும் அப்போது தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி வருகின்றனர்.

நவராத்திரியை கொலு வைத்து கொண்டாடும் சினேகா.! சினேகா பிரசன்னா வீட்டில் நடந்த பூஜை.! 1

விளம்பரம்

மேலும் சமீபத்தில் உடல் எடை அதிகமாக இருந்த சினேகா தீவிர உடற்பயிற்சி செய்து உடல் எடையை வெகுவாக குறைத்துள்ளார். அந்த உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களையும் அவர் அவ்வபோது தனது instagram பக்கத்தில் பதிவேற்றி பலருக்கும் ஒரு இன்ஸ்பிரேஷன் ஆக இருந்து வருகிறார். சமீபத்தில் கூட தனது தந்தையின் பிறந்தநாளை ஒரு ஆதரவற்ற இல்லத்தில் சினேகா வெகு விமர்சையாக கொண்டாடியிருந்தார். அந்த புகைப்படத்தை பார்த்த பலரும் சினேகாவின் உதவும் குணத்தை பாராட்டி இருந்தனர். தந்தைக்கு கூட தெரியாமல் அவரது பிறந்த நாளிற்காக ஆதரவற்ற இல்லங்களில் அவர் குழந்தைகளுக்கு உணவு, நோட்டு, புத்தகம், பேனா வழங்கினார்.

தொடர்புடையவை  கோலாகலமாக நடைபெற்ற இந்திரஜா ரோபோ சங்கர் வளைகாப்பு..! தாத்தாவாகும் குஷியில் ரோபோ சங்கர்..!

நவராத்திரியை கொலு வைத்து கொண்டாடும் சினேகா.! சினேகா பிரசன்னா வீட்டில் நடந்த பூஜை.! 3

விளம்பரம்

இந்த நிலையில் ஒவ்வொரு ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி பூஜையை வெகு சிறப்பாக கொண்டாடி வருகிறார் சினேகா. இந்த பூஜையின் போது சாமியை தானே தன் கையால் அலங்கரித்து அதை வீடியோக்களாக எடுத்து vlogs ஆக வெளியிட்டு இருக்கிறார். தற்போது இந்த வருடம் நடைபெற்ற நவராத்திரி பூஜையில் அவர் பல பிரபலங்களை தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். அந்த வீடியோ சமீபத்தில் வெளியாகி இருக்கிறது.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment