விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் தமிழின் கம்பெனியை கொளுத்திவிட்ட அர்ஜுனை கோதை ஓங்கி ஒரு அறை விடுகிறார். மேலும் தமிழ் ஒரு பீனிக்ஸ் பறவை அவனை எவ்வளவு அழுத்தினாலும் அவன் மீண்டும் எழுந்து வருவான் என்று கூறுகிறார். இதை கேட்ட தமிழ் நெகிழ்ந்து போய் தனது தாயை அம்மா என்று அழைக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பின்னர் தனது தாயிடம் பேசியதால் கோதை நெகிழ்ந்து போய் கட்டிப்பிடித்து அழுகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
கோதையின் குடும்பத்தை எப்படியாவது அழித்துவிட வேண்டும் என்ற நோக்கில் உள்ளே வந்த அர்ஜுன் அவரது திட்டத்தில் ஒவ்வொன்றாக வெற்றி பெற்றுக் கொண்டே வருகிறார். இது பார்ப்பவர்களுக்கு சற்று சுணக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் கெட்டவர்களின் கை ஓங்கி கொண்டே இருப்பது போல காட்டப்படுவதுதான். அதுபோலத்தான் தமிழ் தற்போது கஷ்டப்பட்டு உருவாக்கி வைத்திருந்த கம்பெனியை தீப்பிடித்து எரியும்படி அர்ஜுன் செய்துவிட்டார். அப்போது அங்கு வரும் கோதை, அர்ஜுன் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விடுகிறார். மேலும் நீ தமிழுக்கு எவ்வளவு தீங்கு செய்தாலும், அவன் ஒரு பீனிக்ஸ் பறவை போல் மீண்டும் எழுந்து வருவான் என்று கூறுகிறார்.
இதைக் கேட்ட தமிழ் நெகிழ்ந்து போய் தனது தாயாரிடம் கண் கலங்கி பேசுகிறார். நீண்ட நாட்களுக்குப் பின்பு கோதையும் தமிழும் பேசிக் கொள்கின்றனர். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது. நீங்களும் அந்த ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television