தமிழும் சரஸ்வதிலும் சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் ராகினி வளைகாப்புக்கு சென்ற சரஸ்வதி அங்கு ஏற்பட்ட மோதலில் மயங்கி விழுகிறார். அப்போது அவர் கையை பிடித்து நாடி பார்த்ததில் அவர் கர்ப்பமாக இருக்கும் செய்தி கிடைத்துள்ளது. இதனால் கோதை மற்றும் குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் ராகிணிக்கு வளைகாப்பு நடைபெறுகிறது. இதற்காக கோதை, நடேசன் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் செல்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அப்போது ராகிணியின் மாமியார், ராகிணிக்கு சரஸ்வதி நலங்கு வைக்க வேண்டாம். அவருக்கு குழந்தை இல்லை. அவர் நலந்கு வைத்தால் என் மருமகள் வயிற்றில் வளரும் குழந்தைக்கு ஏதாவது ஆகிவிடும் என்று கூறுகிறார். அப்போது கடுப்பான கோதை, இது என் மருமகள் அவள் நலங்கு வைக்க வேண்டும் என்று சொல்லி கத்துகிறார். அப்போது நலங்கு வைக்கப் போன சரஸ்வதியை அர்ஜுனனின் அக்கா பிடித்து கீழே தள்ளுகிறார். இதனால் மயக்கம் அடைந்து சரஸ்வதி கீழே விழுகிறார். அப்போது அங்கு வரும் மூதாட்டி ஒருவர் சரஸ்வதியின் கையைப் பிடித்து நாடி பார்க்க அவர் கர்ப்பமாக இருக்கும் செய்தியை கூறுகிறார்.

இதனால் குடும்பத்தில் இருக்கும் அனைவரும் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர். நமச்சி தமிழிடம் நீ அப்பா ஆகப் போகிறாய் என்றும், நடேசனிடம் நீங்கள் மீண்டும் தாத்தா ஆகப் போகிறீர்கள் என்றும் கூறிக் கொண்டிருக்கிறார். அந்த மகிழ்ச்சியான ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்.! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television