சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘திருமகள்’ சீரியலில் நடித்த நடிகர்கள் இருவர் தற்போது திருமணம் செய்து கொள்ள இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றனர். திரைத் துறையை பொருத்தவரை, உடன் நடிக்கும் சக நடிகர்களை திருமணம் செய்து கொள்வது சகஜமான ஒன்றுதான்.

நடித்துக் கொண்டிருந்தபோதே காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்ட பலரை தமிழ் திரையுலகில் உதாரணமாக சொல்லலாம். அந்த வகையில் தற்போது ‘திருமகள்’ சீரியலில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்த நடிகர் சுரேஷ் சுரேந்தர் அதே சீரியலின் நடித்து வந்த நடிகை ஒருவரை திருமணம் செய்ய இருப்பதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.

கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ஓவியா’ என்கிற சீரியலின் மூலமாக அறிமுகமானவர் நடிகர் சுரேந்தர். தற்போது விஜய் டிவியின் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மீனவாக நடித்துக் கொண்டிருக்கும் கோமதி பிரியாவுக்கு ஜோடியாக நடித்த அசத்தியிருந்தார். அதன் பின்னர் இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘திருமகள்’ சீரியலில் ராஜா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

ராஜா மற்றும் அஞ்சலி என்ற இருவருக்காகவே இந்த சீரியலை ரசிகர்கள் பலரும் விரும்பி பார்த்து வந்தனர். ஒருநாள் சீரியல் முடிவுக்கு வந்த நிலையில் அடுத்து சுரேந்தர் என்ன செய்யப் போகிறார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். அப்போது ‘மலர்’ சீரியலில் ஹீரோவாக நடித்து வந்த அக்னி சீரியலில் இருந்து விலகிய நிலையில் அந்த கதாபாத்திரத்தில் நடிகர் சுரேந்தர் நடிக்கத் தொடங்கினார்.

தற்போது மலர் சீரியலில் அர்ஜுனாக நடித்த வரும் சுரேந்தர் விரைவில் ‘திருமகள்’ சீரியலில் தன்னுடன் நடித்த நடிகை நிவேதிதாவை திருமணம் செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கிறார். நீண்ட நாட்களாக இருவரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில், தற்போது இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக அறிவித்திருக்கின்றனர்.

மேலும் திருமணத்திற்கு முன்பு எடுக்கப்படும் ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட்டையும் அவர்கள் நடத்தி இருக்கின்றனர். சுரேந்தருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்த நடிகை நிவேதிதா, “முருகன் அருளுடன் இன்றைய நாள் இனிதே ஆரம்பமானது” என்கிற புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார்.

எனவே இந்த தம்பதிகள் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே நிவேதிதா ‘கல்யாணப்பரிசு’, ‘திருமகள்’, ‘சுந்தரி’ ஆகிய சீரியல்களில் நடித்தவர். இவர் ‘திருமகள்’ சீரியலில் நெகட்டிவ் ரோலில் நடித்து மக்கள் மனங்களில் இடம் பிடித்தார்.

இவருக்கு ஏற்கனவே ‘மகராசி’ சீரியலில் ஹீரோவாக நடித்து வந்த ஆரியனுடன் திருமணம் ஆகி விவாகரத்து ஆகியிருந்த நிலையில் தற்போது இரண்டாவதாக சுரேந்தரை திருமணம் செய்ய இருக்கிறார். இந்த தகவலை இரு தரப்பினர் தற்போது உறுதி செய்து இருக்கின்றனர். இருவருக்கும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர்.