தளபதி விஜய் தற்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி உள்ளார். தனது விஜய் மக்கள் இயக்கம் மூலம் பல நல்லதுகளை செய்து வந்த நடிகர் விஜய் தற்போது அரசியல் கட்சி தொடங்கி முழுநேர அரசியல் வாதியாக செயல்பட உள்ளார். விரைவில் நடிக்க ஒப்புக்கொண்ட படங்களை முடித்துவிட்டு தேர்தலில் போட்டியிட தளபதி விஜய் தயாராக உள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விரைவில் பிரம்மாண்ட மாநாடு நடத்த திட்டமிட்டு உள்ள நடிகர் விஜய் அதற்கான பணிகளை மும்முரமாக செய்து வருகிறார். தற்போது முதல்கட்டமாக தனது கட்சிக்கொடியை அண்மையில் அறிமுகம் செய்து வைத்து இருந்தார். அதன்படி தற்போது இன்று விழுப்புரத்தில் தனது முதல் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்தி முடித்து உள்ளார் விஜய். விஜய் பேச்சுக்கள் நிர்வாகிகளுக்கு அவர் மீது நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் பேசிய அவர், தான் ஆட்சிக்கு வந்தால் யாரையும் ஏமாற்ற மாட்டேன் எனவும், கூட்டணி வைத்து கொள்ளையடிக்க மாட்டோம் எனவும் கொந்தளித்து பேசி உள்ளார். நடிகர் விஜயின் பேச்சு அங்கிருந்த நிர்வாகிகளிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
Embed Video Credits : SUN NEWS