இன்று பல சினிமா ரசிகர்களும், நயன்தாராவின் ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருந்த அவருடைய திருமணம் வெகு விமர்சையாக நடந்து முடிந்துள்ளது. தமிழ் சினிமாவில் இவரை மிஞ்ச ஆள் இல்லை என்ற அளவிக்ரு 15 ஆண்டுகள் மேல் இன்றும் மிக பெரிய ஆளுமையே வெளிப்படுத்தியுள்ளவர் நடிகை நயன்தாரா.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என 3 மொழிகளிலுள்ள முன்னணி நாயகர்கள் அனைவருடன் இணைந்து மிக பெரிய வெற்றி படங்களை இவர் கொடுத்துள்ளார். சோலோ ஹீரோயினாகவும் நல்ல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். பல விருதுகளும், பாராட்டுங்களும், பரிசுகளும் அள்ளிய இவருக்கு தள்ளிப்போன ஒரே விஷயம் இவருடைய திருமணம்.

2 கசப்பான காதல் முறிவுகளை பார்த்த இவருக்கு “நானும் ரவுடி தான்” படம் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். படத்திலேயே பாடல்களை “தங்கமே உன்ன தான் தேடி வந்தே நானே” என எழுதியது அப்போது பலருக்கும் புரியவில்லை. இப்பொது அதற்கான உண்மையான உண்மை அனைவர்க்கும் தெரிந்திருக்கும்.

7 ஆண்டுகள் மேல் காதலித்து வந்த இருவரும் இன்று கரம் பிடிக்குறார்கள். மகாபலிபுரத்தில் தனியார் ஹோட்டலில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றுள்ள இந்த திருமணத்தை ஒளிபரப்பு செய்ய Netflix OTT நிறுவனம் இவர்களுக்கு 25 கோடி கொடுத்துளளதாக கூறப்படுகிறது.
தனியார் ஊடகவியலாளர்களுக்கு, பத்திரிக்கையாளகர்களும் அழைப்பு இல்லாமல், பிரைவேடாக நடைபெற்ற இந்த திருமணத்திலிருந்து இன்னும் ஒரு புகைப்படம் கூட வெளியாகவில்லை. ஐவரும் ஜூன் 11 ஆம் தேதி செய்தியாளர்களை சந்திக்கும் போது, அதற்கான புகைப்படங்களை வெளியிடுவதாக இயக்குனர் விக்னேஷ் ஏற்கனவே அறிவித்து இருந்தார்.

இன்று காலை 3 மணி அளவில் இயக்குனர் விக்னேஷ் தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியாக ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். “இன்று ஜூன் 9ஆம் தேதி, நயன்’ஸ் …அனைத்து கடவுளுக்கு நன்றி! என் வாழ்க்கை அழகான மனிதர்களால் கடந்து வந்தது, அதற்கும் நன்றி! நல்ல உள்ளங்கள், நல்ல தருணங்கள், நல்ல நிகழ்வுகள், நல்ல உள்ளங்களின் ஆசிர்வாதங்கள் என் வாழ்க்கையில் எனக்கு கிடைத்தது.ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பில் நடந்த அழகான விஷயங்கள் வாழ்க்கையை அழகாக்கியது. அனைத்து பிரார்த்தனைகளுக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன். இப்போது என் வாழ்வு நயன்தாராவுக்காக அர்ப்பணிக்கப்படுகிறது.
என் தங்கமே! இன்னும் சில மணி நேரங்களில் நாம் இருவரும் ஒன்றாகவே மாற போவதை நினைத்து உற்சாகமாக இருக்கிறேன்’ என்று விக்னேஷ் சிவன் பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
