
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நவி மும்பையின் வாஷி ரயில் நிலையத்தில் ஒரு நபர் பன்வெல் நகரத்திற்குச் செல்லும் ரயிலின் மேல்நிலை கருவியில் பையை வீசியதை அடுத்து ரயில் தீப்பிடித்தது. உடனடியாக ஒரு தீயணைப்பு படை அந்த இடத்திற்கு வரவழைக்கப்பட்டது.
நவி மும்பை வாஷி ரயில் நிலையத்தில் புதன்கிழமையான இன்று காலையில் அடையாளம் தெரியாத ஒரு நபர் ரயிலின் பாண்டோகிராபியில் (மின்சார ரயிலின் கூரையில் ஏற்றப்பட்ட மேல்நிலை இயந்திரம்) அப்புறப்படுத்தப்பட்ட பையை வீசியதால் மத்திய ரயில்வே துறைமுக பாதையில் ரயில் சேவைகள் அரை மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

மத்திய ரயில்வேயின் மூத்த பி. ஆர். ஓ (மக்கள் தொடர்பு அதிகாரி) ஏ.கே.ஜெயின் அவர்கள்,
“காலை 9.28 மணிக்கு திட்டமிடப்பட்டிருந்த பன்வெல்-ரயில் தீ பிடித்ததால் 12 நிமிடங்களுக்கு மேல் தாமதமாக சென்றது. ஒருவர் அப்புறப்படுத்தப்பட்ட பையை பாண்டோகிராப்பில் எறிந்ததால் இவ்வாறு நிகழ்ந்தது. உடனடியாக மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன, தீயணைப்பு படை சம்பவ இடத்தை அடைந்தது, யாரும் காயமடையவில்லை. பாதுகாப்பு காரணங்களுக்காக ரேக் திரும்பப் பெறப்பட்டு கார் கொட்டகைக்கு அனுப்பப்பட்டது”
என்று கூறியுள்ளார். இருப்பினும், அதிக நேரங்களில் கூட பன்வெல் பாதையில் போக்குவரத்து குறைவாக இருப்பதால் பல பயணிகள் பாதிக்கப்படவில்லை. தாமதத்தின் காரணமாக, பல பயணிகள் அருகிலுள்ள வாஷி டிப்போவிலிருந்து பஸ் மூலம் சென்றனர், மேலும் சிலர் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கும் வரை காத்திருக்கத் தேர்வு செய்தனர். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.