வட இந்தியாவில் நடக்கும் காமெடிகளுக்குப் பஞ்சம் இல்லை. அதிலும் குறிப்பாக திருமண வீடுகளில் நடக்கும் காமெடி கலாட்டாக்களுக்கு பஞ்சம் இல்லை. மாலை போடும் போது வேஷ்டி அவிழ்த்து விழுவது, குதிரையில் அமர்ந்து மாப்பிள்ளை ஊர்வலம் செல்லும் போது தீடீரென குதிரை மிரண்டு ஓடி மாப்பிள்ளையை கீழே தள்ளி விடுவது, மேடையில் ஆடிக் கொண்டிருக்கும் போதே மேடை உடைந்து மணமகளும், மணமகனும் கீழே விழுவது போன்ற தமாஷான நிகழ்வுகள் அரங்கேறி வரும். அது மட்டுமில்லாமல் மாலையை ஒழுங்காக போடாமல் மணமகனிடம் அறை வாங்குவது போன்றும், பாக்கெட்டில் பான் பொருட்கள் வைத்திருந்த காரணத்தால் மணமனை கன்னத்தில் பளார் பளார் என அறைந்த மணமகளின் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

இது போன்ற வீடியோக்களை தொகுத்து பார்வையாளர்களை அள்ளும் யூடியூப் சேனல்களும் இருக்கவே செய்கின்றன. குறிப்பாக மணமகன் கன்னத்தில் மணமகள் அறைவது போன்ற சம்பவங்கள் நாள்தோறும் அரங்கேறி வருகின்றன. அதே போன்று ஒரு சம்பவம் தற்போது பீகாரில் நடந்துள்ளது. அதில் மணமகன் குடித்துவிட்டு மணமேடைக்கு வந்துள்ளார். நிற்கவே முடியாமல் தள்ளாடி தள்ளாடி நின்று கொண்டிருக்கிறார். அவரிடம் மாலையைக் கொடுத்து மணமகளுக்கு போடும்படி மணமகளின் தங்கை கூறுகிறார். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக அந்த மாப்பிள்ளை செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாம் திரைப்படங்களில், நாடகங்களில் பார்த்தது போல் குடிபோதையில் இருந்த மாப்பிள்ளை பெண்ணுக்குப் பதிலாக அவருக்கு பக்கத்தில் நின்றிருந்த அவர் தங்கைக்கு மாலை அணிவித்தார். இதனால் கடுப்பான பெண்ணின் தங்கை, அவரை வெளுத்து வாங்கியுள்ளார். இது போல பல கூத்துக்கள் வட இந்தியாவில் அரங்கேறும். அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below video..
Youtube Video Code Embed Credits: Tamil Viral Videos 24×7