சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியலில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் ஜனனியின் தாயாரை சக்தி அவரது வீட்டிற்கு அழைத்து வந்து விடுகிறார். ஆனால் அவரை வெளியே போக சொல்லுமாறு விசாலாட்சி கோபத்தில் கத்திக் கொண்டிருக்கிறார். அதற்கு பதிலுக்கு சக்தியும் அவர் வெளியே சென்று விட்டால் நானும் வெளியே சென்று விடுவேன் என்று அவரது தாயாரை மிரட்டிக் கொண்டிருக்கிறார். அந்த அதிரடியான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. ‘எதிர்நீச்சல்’ சீரியலில் நாச்சியப்பன் தனது குடும்பத்தினரை பார்த்தவுடன் மனம் மாறி விடுகிறார். சொத்தில் பாதியை தருவதாக கூறியவுடன் தனது குடும்பத்தினருடன் சேர்த்து விடுகிறார் நாச்சியப்பன். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நாச்சியப்பன் குடும்பம் ஒன்றாகி விட்ட நிலையில் காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜனனியின் தாயாரை நாச்சியப்பன் கழட்டி விடுகிறார். ஜனனியின் தாயாரும், ஜனனியும் நாச்சியப்பனின் இந்த மாற்றத்தை எதிர்பார்க்காமல் நடுத்தெருவில் கலங்கிப் போய் நின்று கொண்டிருக்கின்றனர். அப்போது சக்தி தனது மாமியாரை தன்னை மகனாக நினைத்துக் கொண்டு தங்களது வீட்டிற்கு வருமாறு அழைக்கிறார். ஆனால் தயக்கத்துடனே ஜனனியின் தாயார் சக்தி, ஜனனியுடன் செல்கிறார். ஆனால் அங்கு வரும் விஷால் ஆட்சி ஜனனியின் தாயாரை உடனடியாக வீட்டில் இருந்து வெளியேறுமாறு கத்துகிறார். ஆனால் சக்தி அவர் வெளியேறிவிட்டால் நானும் இந்த வீட்டில் இருந்து வெளியேறி விடுவேன் என்று சொல்லி மிரட்டுகிறார்.

சக்தியின் இந்த கோபத்தை பார்த்த விசாலாட்சி அதிர்ச்சியில் நின்று கொண்டிருக்கிறார். அந்த அதிரடியான ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Sun TV