விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘ஆஹா கல்யாணம்’ தொடரில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் சூர்யா தனது தாயாரிடம், “மஹாவைப் பொறுத்தவரை அவர் எனக்கு மூன்றாவது மனுஷி தான். அவள் இந்த வீட்டிற்கு வந்த ஒரு விருந்தினர் என்றைக்கும் என் மனைவியாக முடியாது” என்று கூறிக் கொண்டிருக்கிறார். இதை கேட்ட மஹா சோகத்தில் கண்ணீர் வடிக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. ஒளிபரப்பாகத் தொடங்கிய சில நாட்களிலேயே மக்கள் மனங்களில் இடம் பிடித்திருக்கிறது ‘ஆஹா கல்யாணம்’ தொடர். முதல் பத்து சீரியல்கள் தரவரிசையில் இடம் பெற்று மக்களின் மனம் கவர்ந்த தொடராக இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் ஹீரோவான சூர்யா தற்போது தனது மனைவி மஹாவிடம் நெருங்கி பழக ஆரம்பித்திருக்கிறார். இவர்களின் இருவருக்கிடையிலான கெமிஸ்ட்ரி நன்றாக ஒத்துப் போவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்த நிலையில் இருவரும் விரைவில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் இன்று சூர்யா தனது தாயாரிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது மஹாவைப் பொறுத்தவரை எனக்கு அவர் மூன்றாவது மனுஷி தான், என்றைக்கும் அவர் என்னுடைய மனைவியாக முடியாது என்று கூறிக் கொண்டிருக்கிறார். இதை மஹா வெளியில் இருந்து கேட்டு விடுகிறார். பின்னர் மனம் உடைந்து கண்ணீர் விட்டு அழுது கொண்டிருக்கிறார்.

பின்ன சாப்பிட வரும் சூர்யாவிடம் உணவு பரிமாறிக் கொண்டிருக்கும் மஹா, நான் ஒரு மூன்றாவது மனைவியாக தான் உங்களுக்கு இதை பரிமாறுகிறேன் என்று கூற சூர்யா அதிர்ச்சியில் அப்படியே உறைகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television