நீ நாசமா போய்டுவ கோபி, பெத்த வயிறு பத்தி எரியுது.! கோபிக்கு சாபம் விட்ட ஈஸ்வரி

பாக்கியலட்சுமி தொடரின் ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. கோபி ராதிகா கழுத்தில் தாலி கட்டி விட்டார். அந்த நேரம் பார்த்து மண்டபத்திற்கு வரும் கோபியின் தாயார் ஈஸ்வரி மற்றும் ராமமூர்த்தி இருவரும் அதிர்ச்சியில் உறைகின்றனர். பல நாள் போராட்டத்திற்குப் பிறகு தனது கல்லூரி கால காதலியான ராதிகாவை மணம் முடித்திருக்கிறார் கோபி. தனது மனைவி பாக்யாவுக்கு விவாகரத்து கொடுத்த பிறகு, காதலியை இரண்டாவதாக திருமணம் செய்து இருக்கிறார். இந்த திருமணத்திற்கு கோபியின் வீட்டில் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், அதையெல்லாம் மீறி இன்று தனது காதலியை கரம் பிடித்து இருக்கிறார் கோபி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நீ நாசமா போய்டுவ கோபி, பெத்த வயிறு பத்தி எரியுது.! கோபிக்கு சாபம் விட்ட ஈஸ்வரி 1

விளம்பரம்

இந்த விஷயம் தெரிந்து மண்டபத்திற்கு வரும் ஈஸ்வரி மற்றும் ராமமூர்த்தி கோபியை சபிக்கின்றனர். நீ எல்லாம் நல்லாவே இருக்க மாட்ட என்று கூறுகின்றனர். அதற்கு கோபி நீங்கள் என்ன சாபம் விட்டாலும் நாங்கள் இருவரும் வாழ்ந்து காட்டுவோம் என்று பதிலளிக்கிறார். இனியா அழுது கொண்டே இருக்கிறார். அப்போது அங்கு வரும் பாக்யாவை பார்த்து ஈஸ்வரி, என் மருமகளையும் இனியாவையும் இனிமேல் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறிவிட்டு அங்கிருந்து செல்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது.

தொடர்புடையவை  'எதிர்நீச்சல்' சீரியலில் இருந்து விலகிய நடிகை..! இனி இவருக்கு பதில் இவர்..! யாருன்னு பாருங்க..!

நீ நாசமா போய்டுவ கோபி, பெத்த வயிறு பத்தி எரியுது.! கோபிக்கு சாபம் விட்ட ஈஸ்வரி 3

விளம்பரம்

இனி பாக்கியத்தை லட்சுமி தொடரில் என்ன நடக்கும், பாக்யா என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பது குறித்து பொறுத்திருந்து பார்க்க வேண்டும். தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவை நீங்களும் காண.. Watch the below video..

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment