பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ஜெனி அமிர்தாவின் மகளை தூக்கிக் கொண்டு செழியன் அறைக்கு வருகிறார். மேலும் அங்கு அமர்ந்திருக்கும் செழியனை பார்த்து பெரியப்பா என்று கூப்பிடச் சொல்லி நிலா பாப்பாவிடம் கூறுகிறார். இதை கேட்ட செழியன் நான் ஒன்றும் இவளுக்கு பெரியப்பா கிடையாது என்று கோபமாக கூறுகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. பாக்கியலட்சுமி சீரியலில் கடந்த வாரம் எழில் மற்றும் அமிர்தாவின் திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. அமிர்தா கைக் குழந்தையுடன் இருக்கும் ஒரு கைம்பெண் ஆவார். திருமணம் ஆன சில வருடங்களிலேயே ஒரு விபத்தில் கணவரை இழந்த அவர், தனது கைக்குழந்தையுடன் மாமனார் மாமியாருடன் வசித்து வருகிறார். அப்போது ஒரு குறும்படத்திற்காக எதிர்பாராத விதமாக எழிலை சந்திக்கும் அவருக்கு, எழிலுடன் காதல் ஏற்படுகிறது. இத்தனை நாள் இந்த விஷயத்தை வீட்டில் சொல்லாமல் மறைத்து வைத்திருந்தார் எழில். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஒரு கட்டத்தில் வீட்டில் உள்ள அனைவருக்கும் இந்த விஷயம் தெரிய வர எழிலுக்கு அவசர அவசரமாக வேறு ஒரு பெண்ணுடன் திருமண ஏற்பாடுகள் நடத்த திட்டமிட்டு இருந்தனர். ஆனால் கட்டாய கல்யாணத்தால் தனது வாழ்க்கை சீரழிந்தது போல தன்னுடைய மகன் வாழ்க்கையையும் சீரழிந்து விடக்கூடாது என்பதற்காக பாக்யா இந்த அவசர திருமணத்தை உடனடியாக நிறுத்தினார். பின்னர் எழில் இத்தனை ஆண்டுகளாக காதலித்து வந்த அமிர்தாவையே அவருக்கு திருமணம் செய்து வைத்துவிட்டார். திருமணம் செய்த பின்பு தனது குழந்தையுடன் பாக்யா வீட்டில் வசித்து வருகிறார் அமிர்தா. இந்த திருமணத்தை கோபி, செழியன் மற்றும் ஈஸ்வரி பாட்டி ஆகிய மூவரும் ஏற்கவில்லை. அவர்களுக்கு இந்த திருமணத்தில் துளியும் விருப்பமில்லை. இருந்தபோதிலும் வேறு வழியில்லாமல் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர். இந்த நிலையில் இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஜெனி அமிர்தாவின் மகளை தூக்கிக் கொண்டு செழியன் அறைக்கு வருகிறார்.

மேலும் அங்கு அமர்ந்திருக்கும் செழியனை பார்த்து பெரியப்பா என்று கூப்பிடச் சொல்லி நிலா பாப்பாவிடம் கூறுகிறார். இதை கேட்ட செழியன் நான் ஒன்றும் இவளுக்கு பெரியப்பா கிடையாது என்று கோபமாக கூறுகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. அந்த ப்ரோமோவை நீங்களும் காண.! Watch the Below Video.!
Youtube Video Embed Code Credits: Vijay Television