விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ஈஸ்வரி சரியாக சாப்பிடாத காரணத்தினால் தூக்கத்திலேயே மயக்கம் அடைந்து படுக்கையில் கிடக்கிறார். அவரை பார்க்கும் கோபி ஆம்புலன்ஸை வரவழைத்து, மருத்துவமனையில் அனுமதிக்கிறார். அங்கே பாக்யாவும் மற்ற குடும்பத்தினரும் பதறி அடித்துக் கொண்டு ஓடி வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கோபியும், ராதிகாவும் பாக்யா வீட்டில் இருந்து வெளியேறும் பொழுது ஈஸ்வரியும் அவர்களுடன் வெளியேறுகிறார். ஆனால் ராதிகாவின் தாயார் கமலாவுக்கும் ஈஸ்வரிக்கும் ஏழாம் பொருத்தமாக இருந்து வருகிறது. இது கோபிக்கு மிகுந்த மன உளைச்சலை தருகிறது. எனவே அவர் ஈஸ்வரியை மீண்டும் பாக்யா வீட்டிற்கு திருப்பி அனுப்ப பாக்யாவிடம் சென்று பேச்சு வார்த்தை நடத்துகிறார். அப்போது கோவிலில் ஈஸ்வரியை சந்திக்கும் பாக்யா அவரை திருப்பி வீட்டிற்கு வந்து விடுமாறு அழைக்கிறார்.

இந்த நிலையில் சரியாக சாப்பிடாதவாறு ஈஸ்வரியை மயங்குகிறார். அவரை கோபி மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television