ஊருக்கு சென்ற கதிர் பிணமாகத் தான் வருவான் என்று ஆதி குணசேகரன் பேசியிருந்தார் தற்போது வீட்டிற்கு வந்த கதிரிடம் நந்தினி அந்த விஷயத்தை போட்டு உடைத்து விடுகிறார் இதைக் கேட்ட கதிர் தற்போது கோபமடைந்து ஆதி குணசேகரனிடம் சென்று எதற்காக அப்படி சொன்னீர்கள் என்று கத்துகிறார். இதனால் ஆதி குணசேகரன் என்ன செய்வது என்று தெரியாமல் நிலைகுலைந்து போய் நிற்கிறார். அந்த ப்ரோமோவை தற்போது சன் டிவி வெளியிட்டு இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் தற்போது ஆதி குணசேகரன் தனது தம்பி கதிர் மற்றும் வளவனை ஜீவானந்தத்தை கொலை செய்வதற்காக அனுப்பி வைக்கிறார். ஆனால் அங்கு எதிர்பாராத விதமாக ஜீவானந்தத்தின் மனைவி சுடப்பட்டு இறந்து விடுகிறார். இதை தற்போது தனது அண்ணன் குணசேகரன் போன் செய்து கூறிக் கொண்டிருக்கிறார் .எல்லாம் அந்த ஜனனியால் தான், அவள் நடுவில் வந்து காரியத்தை கெடுத்துவிட்டாள் என்று சொல்லி பேசிக் கொண்டிருக்கிறார். பின்னர் வீட்டிற்கு வரும் கதிரிடம் நீங்கள் பொணமாகத்தான் வருவீர்கள் என்று உங்கள் அண்ணன் கூறினார்.

உங்களுக்கு என்ன சொன்னால் கோபம் வரும்? என்று சொல்லி நந்தினி கதிரின் சட்டையைப் பிடித்துக் கேட்கிறார். அப்போது கோபமான கதிர் தனது அண்ணன் குணசேகரிடம் சென்று எதற்காக அப்படி சொன்னீர்கள்? என்று சொல்லி கத்துகிறார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் ஆதி குணசேகரன் நிலை குலைந்து போய் நிற்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Sun Tv