பாக்கியலட்சுமி தொடருக்கென தனி வரவேற்பு மக்கள் மத்தியில் உள்ளது. காரணம் பல குடும்ப தலைவிகள் வாழ்க்கையில் நடப்பதை திரைக்கதையாக இயக்குனர் வடிவமைத்து இருப்பதே ஆகும். நாளுக்கு நாள் இந்த தொடரின் ரசிகர்கள் கூட்டமும் அதிகரித்து கொண்டே தான் வருகிறது. தற்போது சீரியல் சூடுபிடித்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு வருகிறது.

இந்நிலையில் இந்த தொடரில் ஜெனி கதாபாத்திரத்தில் நடித்து வந்த திவ்யா தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இதனை புகைப்படமாக எடுத்து அவரே வீடியோவும் வெளியிட்டு உள்ளார். மேலும் தற்போது ஒப்பந்தமாகி இருக்கும் மகாநதி சீரியலிலும் நடிக்க முடியவில்லை என கூறி உள்ளார்.

தன்னால் அந்த தொடரில் நடிக்க முடியாது எனவும் , எனவே அவர்கள் புதிய நடிகையை தேட வேண்டும் என கூறி பகிர்ந்துள்ளார். ரசிகர்கள் அவர் உடல்நலம் பெற அவருக்காக பிரார்தனைகளை செய்து வருகின்றனர்.