முத்துவை உதாசீன படுத்தும் மீனா.! ஓங்கி அறைந்த அண்ணாமலை.! அவமானப்படுத்தும் காவலர்கள்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் காரை மீட்பதற்காக முத்து போராடிக் கொண்டிருக்கிறார். ஆனால் முத்துவை காவலர்கள் மிகவும் கீழ்த்தரமாக நடத்துகின்றனர். அவரை டீ, காபி வாங்கி தரச்சொல்லி அசிங்கப்படுத்துகின்றனர். முத்துவும் சகித்துக் கொண்டு இந்த வேலை எல்லாம் செய்து கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முத்துவை உதாசீன படுத்தும் மீனா.! ஓங்கி அறைந்த அண்ணாமலை.! அவமானப்படுத்தும் காவலர்கள் 1

விளம்பரம்

முத்துவுக்காக அவரது மனைவியின் மீனா பூ கட்டி வேலை செய்து ஒரு கார் ஒன்றை வாங்கி தருகிறார். நன்றாக போய்க் கொண்டிருந்த நிலையில், மீனாவிற்கும் அவரது தம்பியின் நண்பர் சிட்டிக்கும் சண்டை ஏற்படுகிறது. இதனால் முத்துவை பழி வாங்கும் நோக்கில் சிட்டி, முத்து பாரில் இருப்பது போன்ற ஒரு வீடியோவை தயார் செய்து சமூக வலைதளங்களில் பரப்பி விடுகிறார். முத்து குடித்துவிட்டு கார் ஓட்டி விபத்து ஏற்படுத்துவதாக கூறி அவரது காரை போலீசார் பறிமுதல் செய்கின்றனர். மேலும் முத்துவின் லைசென்ஸையும் கேன்சல் செய்ய முடிவெடுக்கின்றனர்.

தொடர்புடையவை  வாயை கொடுத்து வாங்கி கட்டிக்கொண்ட தனலட்சுமி, மீம்ஸ் போட்டு வச்சி செய்யும் ஜிபி முத்து ரசிகர்கள்

முத்துவை உதாசீன படுத்தும் மீனா.! ஓங்கி அறைந்த அண்ணாமலை.! அவமானப்படுத்தும் காவலர்கள் 3

விளம்பரம்

முத்துவை அவரது தந்தை அண்ணாமலை மற்றும் அவரது மனைவி மீனா ஆகிய யாருமே நம்பவில்லை. எனவே முத்து காவல் நிலையத்திற்கு சென்று அங்கு காவலரிடம் கெஞ்சி கொண்டிருக்கிறார். ஆனால் முத்துவை டீ வாங்கி தர சொல்லியும், எடுபிடி வேலை பார்க்க சொல்லியும் காவலர்கள் மிகவும் அசிங்கப்படுத்துகின்றனர். முத்துவும் அவர்களுக்கு இந்த வேலையெல்லாம் செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்ட வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment