தென்றல் வந்து என்னை தொடும் தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் தற்போது வெற்றியே அபியை கடத்த சில சதித்திட்டங்களை தீட்டி கலெக்டர் அலுவலகத்திற்குள் நுழைகிறார். அங்கு அவர் அபியை கடத்திக்கொண்டு சென்று விட்டதாக தெரிகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தென்றல் வந்து என்னை தொடும் தொடரில் தற்போது அடுத்தடுத்த திருப்பங்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில் கலெக்டராக இருக்கும் அபிக்கு தற்போது ஒரு ஆபத்து ஏற்படுகிறது. கலெக்டர் அலுவலகத்தை மக்கள் பலரும் முற்றுகையிட்டு கல்லால் தாக்க தொடங்குகின்றனர். இதனால் என்ன செய்வது என்று நிலைகுலைந்து போய் இருக்கிறார் அபி. மேலும் அருகில் இருக்கும் மாவட்டங்களில் இருந்து பல போலீஸ் படைகளை தங்களது மாவட்டத்திற்கு வருமாறும் உத்தரவிடுகிறார். ப்ரோமோ வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பிரபல ரவுடியாக இருக்கும் வெற்றி தனது மனைவி அபியுடன் இணைந்து வாழ்வதற்காக பலக்கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். தற்போதுதான் அவருக்கு தனது மனைவிக்கும் தனக்கும் பிறந்த குழந்தை சுடர் என்கிற உண்மை தெரிய வந்திருக்கிறது. மேலும் சுடருக்கு சிலம்பம் கற்றுக் கொடுப்பதற்காக தற்போது அபியின் வீட்டிற்கு அவர் வந்திருக்கிறார். இந்த நிலையில் இருவருக்குள்ளும் நல்ல கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆக தொடங்கி இருக்கிறது. இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் கலெக்டராக இருக்கும் அபிக்கு எதிராக சதித்திட்டம் நடக்கிறது. கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் பலரும் கற்களை வீசி தாக்கத் தொடங்குகின்றனர். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் நிலைகுலைந்து போயிருக்கிறார் அபி. தற்போது போலீசாரின் உதவியை நாடி இருக்கிறார். பக்கத்து மாவட்டங்களில் இருந்து போலீஸ் படைகளை இறக்குமாறு கூறுகிறார்.

அந்த சமயத்தில் வெற்றி மாஸ்க் அணிந்து கொண்டு அபியின் அறைக்குள் நுழைகிறார். அவர் அபியை காப்பாற்றுவதற்காக அவரை கடத்திச் செல்வது போன்று தெரிகிறது. இதனால் அடுத்து என்ன நடக்கும் என்கிற பரபரப்பு தற்போது எழுந்திருக்கிறது. நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television