‘தூத்துக்குடி’, ‘ராமன் தேடிய சீதை’ படத்தில் சிறப்பாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை கார்த்திகா . இவர் ‘பிறப்பு’ படத்தின் “உலக அழகி நான்தான்” பாடலால் மக்கள் மனதில் இன்று நிலைத்து நிற்கிறார்.சில படங்களில் மட்டுமே நடித்த அவர் கடைசியாக நடித்த படம் 2010 இல் வெளிவந்த

‘365 காதல் கடிதங்கள்’ ஆகும். அதன் பின்னர் தன் தங்கையின் படிப்பிற்காக மும்பை சென்றதால் பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தும் நடிக்க நடிக்க முடியாத சூழ்நிலை இவருக்கு ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.தற்போது மீண்டும் அவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் படத்தில் நடிப்பதற்காக வாயப்பு கிடைத்துள்ளது.

இயக்குனர் பி.எம்.ரவி இயக்கத்தில் உருவாக்கப்படும் “மாயாமுகி” படத்தில் நடிகை மனோசித்ரா, தெலுங்கு நடிகர் ரவி தேஜா ஆகியோருடன் நடிக்கிறார். பெரிய பட்ஜெட்டால் உருவாக்கப்படும் இப்படத்தின் தயாரிப்பாளர் தில்லி பாபு. இதனால் கார்த்திகாவிற்கு மேலும் 2 தெலுங்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் என்று கூறபடுகிறது. தமிழிலும் நடிக்க பேச்சுவார்த்தை நடந்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
