பிரபல இசையமைப்பாளராக இருக்கும் விஜய் ஆண்டனியின் மகள் மீரா இன்று(செப்.19) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணத்திற்கு என்ன காரணம் என்பது தெரியாமல் பலரும் திகைத்து வரும் நிலையில், பிரேத பரிசோதனை முடிந்து மீராவின் உடல் வெளியே வந்தது. அதைப் பார்த்த விஜய் ஆண்டனி தற்போது மனமடைந்து அழுது இருக்கிறார். அந்த வீடியோ பலரையும் கலங்க வைத்துள்ளது. கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான சுக்ரன் என்கிற படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி.

இவர் 2006 ஆம் ஆண்டு பாத்திமா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மீரா மற்றும் லாரா என்கிற இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள். மீரா பண்ணிரெண்டாம் வகுப்பு படித்து வந்த நிலையில், இன்று காலை மூன்று மணிக்கு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்த மீரா நேற்று பள்ளி விடுமுறை என்பதால் தனது நண்பர்களை சந்திப்பதற்காக சென்றுள்ளார். சந்தித்து விட்டு திரும்பிய மீரா இரவு வழக்கம் போல் சாப்பிட்டுவிட்டு தனது அறையில் தூங்குவதற்காக சென்றுள்ளார்.

பின்னர் அதிகாலை 3 மணிக்கு தனது மகளின் அறையைப் பார்த்த விஜய் ஆண்டனிக்கு மகள் தூக்கில் தொங்குவது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். மகனின் இறப்பு தாங்காமல் விஜய் ஆண்டனி உடைந்து போயிருக்கிறார். இந்த நிலையில் மீரா ஓராண்டாகவே மன அழுத்தத்திற்காக சிகிச்சை எடுத்துக் கொண்ட தகவல் தற்போது கிடைத்துள்ளது.

மீராவின் இந்த முடிவுக்கு என்ன காரணம்? என்று போலீசார் பல கோணங்களில் விசாரித்து வருகின்றனர். மேலும் அவரின் செல்போனை பறிமுதல் செய்து அதையும் சோதனை நடத்தி வருகின்றனர். அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடித்து விஜய் ஆண்டனியின் மகள் உடல் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. உடலைப் பார்த்த விஜய் ஆண்டனி உடைந்து போய் அழுது கொண்டிருக்கிறார். இந்த வீடியோ பலரையும் கலங்க வைத்துள்ளது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: News18 Tamilnadu