சிம்பு தமிழ் ரசிகர்களால் எஸ்.டி.ஆர் என்று செல்லமாக அழைக்கப்படுகிறார். இவரது ரசிகர்கள் தான் இவருக்கு பலம். சிம்பு சிறிது காலமாக படவாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தபோதிலும் இவரது ரசிகர்கள் இவரை கைவிடவில்லை. சிம்புவிற்கு தனது ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு கொடுத்து கொண்டேதான் இருந்தனர்

தற்போது சிம்பு உடல் எடையை குறைத்து அழகான தோற்றத்துடன் உள்ளார். கடுமையான உடற்பயிற்சியை மேற்கொண்டு ரசிகர்களை வியப்படைய செய்தார். சமூகவளைதளங்களில் ரசிகர்களுடன் இணைந்தே இருப்பார் எஸ்.டி.ஆர்.
ஈஸ்வரன் படத்திற்கு பிறகு சிம்பு மாநாடு எனும் படத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. படப்பிடிப்பு முடிந்த நிலையில் படம் கொரோனா காரணமாக திரையிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக மாநாடு பட தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ரசிகர்கள் மாநாடு படத்திற்காக காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், ரசிகர்களுக்கு மற்றொரு இன்பச்செய்தி கிடைத்துள்ளது. சிம்பு பிரபல இன்டர்நெஷ்னல் நிகழ்ச்சியான “சர்வைவர் 2021” எனும் தமிழாக்க நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்று சொல்லப்படுகிறது. இது ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக இருக்கும் என்பதில் எந்த ஒரு மாற்றுக்கருத்தும் இல்லை.
