மகாத்மா காந்தி உலகத்திற்காக விலைமதிப்பற்ற ஆன்மீக மரபை விட்டுச் சென்றுள்ளார் – சீனா!

மகாத்மா காந்தி உலகத்திற்காக விலைமதிப்பற்ற ஆன்மீக மரபை விட்டுச் சென்றுள்ளார் - சீனா! 1

மகாத்மா காந்தி அவர்கள் இந்த உலகிற்காக விலைமதிப்பற்ற ஆன்மீக மரபை விட்டுச் சென்றுள்ளார் என்று காந்தியடிகளை சீனா தனது புகழ்பெற்ற வார்த்தைகளைத் தெரிவித்துள்ளது.

அக்டோபர் 2ம் தேதி மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளன்று மகாத்மா காந்தி இந்திய மக்களுக்கு உத்வேகம் அளித்தது மட்டுமல்லாமல், ஒரு விலைமதிப்பற்ற ஆன்மீக மரபையும் உலகுக்கு விட்டுச் சென்றுவிட்டார் என்றும்

விளம்பரம்

சீனாவும் இந்தியாவும் ஒரு பொதுவான பயணத்தில் சோகத்தையும் துயரத்தையும் பகிர்ந்து கொள்ளும் சக பயணிகள்”

என்று கூறியுள்ளது. சீனாவின் புகழ்பெற்ற சிற்பியும் கலைஞருமான யுவான் ஜிகுன் என்பவரால் சிற்பமாக வடிவமைக்கப்பட்ட மகாத்மா காந்தியின் சிலை 2005 ஆம் ஆண்டில் புகழ்பெற்ற சாயாங் பூங்காவில் நிறுவப்பட்டதிலிருந்து அக்டோபர் 2 முதல் பெய்ஜிங்கிற்கு சிறப்பு முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது. இதன் மூலம் கம்யூனிஸ்ட் தேசத்தில் அவரது அபிமானிகளுக்கு சமாதானத்தின் தூதுவரான மகாத்மா காந்தி அவர்களுக்கு மரியாதை செலுத்துவதற்கான வாய்ப்பை வழங்குகிறது என்று கருதுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் காந்தி ஜெயந்தி அன்று, அழகிய பூங்கா மகாத்மா காந்தியின் பஜனைகள் மற்றும் அவரது புகழ்பெற்ற சொற்களைக் கொண்டு ஒலிக்கிறது. சீன மூத்த அதிகாரி ஒருவர்

விளம்பரம்
தொடர்புடையவை  துர்கா பூஜையில் சர்ச்சையை ஏற்படுத்திய பந்தல்!!

“இந்திய தேசிய விடுதலை இயக்கத்தின் தலைவராகவும், முன்னோடியாகவும், மகாத்மா காந்தி இந்தியாவின் சுதந்திரத்திற்கு சிறப்பான பங்களிப்புகளை வழங்கியுள்ளார்”

என்று கூறியுள்ளார். மேலும் சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜெங் ஷுவாங் அவர்கள்

விளம்பரம்

“மகாத்மாவின் செயல்கள் இந்திய மக்களுக்கு உத்வேகம் அளித்தது மட்டுமல்லாமல், உலகிற்கு ஒரு விலைமதிப்பற்ற ஆன்மீக மரபையும் விட்டுச்சென்றன. தற்போது, ​​சீனாவும் இந்தியாவும் தேசிய வளர்ச்சியின் முக்கியமான கட்டத்தில் உள்ளன. அரசியல் பரஸ்பர நம்பிக்கையை மேம்படுத்தவும், நடைமுறை ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும், கூட்டாக தேசிய புத்துணர்ச்சியை அடையவும் இந்தியாவுடன் இணைந்து செயல்பட சீனா தயாராக உள்ளது.”

என்று கூறியுள்ளார்.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment